காதல் வரம்

1–2 minutes

read

கவிதைச்  சரம் கோர்த்திருந்தேன்

உன் வார்த்தைக்காக காத்திருந்தேன்

நிலவு தன்னை ரசித்திருந்தேன்

நிலவு உன்னை ரசிக்க காத்திருந்தேன்

புத்தகம் பலவாசித்து இருந்தேன்

நாவல் உன்னை படிக்க காத்திருந்தேன்

வந்தடைந்தாய் வானதியே

வார்த்தைகளை உதிர்த்தாய்

கவிதைகள் பொருள் இழந்தன

முகம் தன்னை காண்பித்தாய்

நிலவு பொலிவு இழந்தது

உன் சந்திப்பை கதை வடித்தால்

புத்தகங்கள் கலை இழக்கும்

இவை அனைத்தும் நடப்பதே வரம்

உன்னை கரம் பிடித்தால்

அதுவல்லவா என் வாழ்க்கைக்கு வரம்!!

– பாலச்சந்தர்

Image

2 responses to “காதல் வரம்”

  1. Nice Kavithai Sir…

    1. நன்றி மணிகண்டன் 🙂

Leave a Reply to Balachandar KCancel reply

Discover more from Balachandar Kaliappan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading