தூரமெல்லாம் தூரமில்லை

1–2 minutes

read

பிரிவெல்லாம் பிணைக்கும் போது
தூரமெல்லாம் நெருங்கும் போது
கனவெல்லாம் நினைவாகும் போது
தூரிகையெல்லாம் உனை வரையும் போது

கவிதையெல்லாம் நீயாகும் போது
நாளெல்லாம் உன் மணம் வீசும் போது
இருளெல்லாம் உன் விழி ஆகும் போது
காற்றெல்லாம் உன் நினைவை மீட்டும் போது

நடை எல்லாம் உன் வாசல் வரும் போது
குரலெல்லாம் உன் வார்த்தைகள் பேசும் போது
செவியெல்லாம் நம் மகன் பேச்சில் நிறையும் போது
என் உள்ளமெல்லாம் நீயாகும் போது

என்னவளே தூரமெல்லாம் தூரமில்லை!
துயில் கொள்ளடி
தூரமெல்லாம் தூரமில்லை!1

Leave a Reply

Discover more from Balachandar Kaliappan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading