இந்நாளில் பாரதி

1–2 minutes

read

நான் கண்ட பாரதம்
நசுங்கி கிடக்க
நெஞ்சில் சுமையோடு
வீதி வழி வந்தேன்
சுதந்திர இந்தியாவை
வளம் பெற்ற இந்தியாவை
காணவந்த கருவிழியில்
ஊழல் பிசாசையும்
ஒழுக்கமற்ற அரசியல்வாதிகளையும்
ஒற்றுமை இல்லா மக்களையும்
காண்கையில், விழி இருந்தும் பயனில்லை பாரத மாதா!
தெருவெல்லாம் மரம் வாழ
அதை அண்டி மக்கள் வாழ
சிட்டு குருவி தினம் சிரித்த வீதி
வான் உயர கட்டிடங்கள் நிரப்புகையில்
மயானம் போல காட்சி அளிக்குதடி!
மக்களின், எம்மக்களின் நிலைகண்டு
என் ஆவியே தூக்கில் தொங்க துடிக்குதடி!
– பாலச்சந்தர் ( பாரதியார் நினைவு தினத்தையொட்டி எழுதப்பட்ட கவிதை)

11 responses to “இந்நாளில் பாரதி”

  1. பாரதியை எல்லோரும் மறந்திருக்கும் வேளையில் மிகச் சிறப்பாக ஒரு கவிதை மூலம் அஞ்சலி செலுத்தி விட்டீர்கள், பாலா!

    கடைசி வரி பாரதியின் மனநிலையை மட்டுமல்ல; பாரதியை இன்னும் நினைவில் வைத்துக்கொண்டு இருக்கும் பலரின் மன நிலையையும் அப்படியே படம் பிடித்துக் காட்டுகிறது!

    வாழ்த்துகள், பாராட்டுக்கள்!

    1. நன்றி அம்மா, நெஞ்சில் உரைத்ததை வார்த்தைகளில் எழுதிவிட்டேன்.

      1. உண்மையாக நெஞ்சை தொட்டது!

      2. நன்றி, உங்கள் வார்த்தை என்னை ஊக்கபடுத்துகின்றது

      3. தமிழில் நிறைய எழுதுங்கள், ப்ளீஸ்!

      4. நிச்சயமாக!!

  2. நல்லதோர் வீணை செய்தே
    அதை நலங்கெட புழுதியில்
    எறிவதுண்டோ

    சொல்லடி
    சிவசக்தி
    சுடர் மிகும்
    அறிவுடன்
    என்னை படைத்தாய்
    சொல்லடி
    சிவசக்தி
    சுடர் மிகும்
    அறிவுடன்
    என்னை படைத்தாய்…..?

    என்று பாரதி அன்று கேட்ட கேள்விக்கு…
    இன்னும் இன்னும் இதுபோல் பதில் வரும்…
    உங்களை போல் புதிய தலைமுரையிடமிரிந்து…
    வாழ்க தமிழ்..

  3. பாரதியின் ஆதங்கம் கனமான கவிதை !

    1. மிக்க நன்றி

  4. புவனேஸ்வர் Avatar
    புவனேஸ்வர்

    இது பாரதியின் ஏக்கம் மட்டுமல்ல பாரத மாதாவின் ஏக்கமும் தான்…………….

Leave a Reply to Balachandar KCancel reply

Discover more from Balachandar Kaliappan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading